(((---உன்னன்பில் வாழ்கிறேன் ---))) (பிரியாராம் )
நிலையில்லா வாழ்க்கையில்
நிரந்தமில்லா கனவுகளில்
நிலையான உன்னன்பு ..,
நீரோட்டமாய் என்சுவாசத்திலும் ,
நாடிநரம்புகளின் இரத்தநாளங்களிலும்,
சுகமாய் நித்தம் வருடுவதால்
மேகம்போல் சூழும் சோகத்தை
மறந்து தோகையை விரித்தாடும்
மயில்போல் மகிழ்ச்சிகொண்டு,
மனம் அழும் ஓசையை
குயில் பாடும் சங்கீதமாக்கி
நிழல் போன்ற வாழ்வை
நிஜமாய் வாழ்கின்றேன் ...........
No comments:
Post a Comment